
தமிழகத்தில் 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. மேலும் 12ம் வகுப்பு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தங்களது மேற்படிப்பில் சேர மாணவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மே 8ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் படி கடந்த 8ம் தேதியில் இருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று வரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ள நிலையில் அவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மக்களே அலர்ட்.., கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுத்தா?? அப்போ உடனே Inform பண்ணுங்க!!!
இதனை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற மே 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.