தமிழகத்தில் படிப்பு, வேலை உள்ளிட்டவைகளுக்காக தலைநகர் சென்னையில் பலர் தங்கி தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக தனியார் விடுதிகள், இல்லங்களை தேர்வு செய்து தங்குகின்றனர். இந்த, விடுதிகள், இல்லங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
Enewz Tamil WhatsApp Channel
பதிவு செய்யப்படாத விடுதிகள், இல்லங்களுக்கான அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்தக் கட்டிடம் குறித்த ஆவணங்களை கடந்த அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யாதவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரும் நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கால அவகாசத்தை நீட்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.