அரசு மருத்துவமனைகளில், காலாவதி மருந்துகள் விநியோகிப்பதை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
அதிரடி உத்தரவு:
மருந்துகளை காலாவதியாகச் செய்ததாக ஓய்வூதியம் வழங்க மறுத்ததை எதிர்த்து, கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அவருடைய மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த 5ம் தேதி விசாரித்தார்.
எலான் மஸ்கின் அடுத்த ஷாக்., இனி இவங்களுக்கு தான் அதிகாரப்பூர்வ கணக்கு! வெளியான அறிவிப்பு!!
இதையடுத்து அரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள் விநியோகிப்பதை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் காலாவதியாகாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை மிகவும் திருப்தியாக இருந்ததை அடுத்து, அவருக்கு நீதிபதி பாராட்டை தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கு நவ.11ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது