மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு – துணைபதிவாளர் உட்பட 15 பேர் பணியிட மாற்றம்..!

0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பல்கலைக்கழக துணைபதிவாளர் அன்புச்செல்வன் உட்பட 15 பேரை பணியிட மாற்றம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

எங்கு பார்த்தாலும் முறைகேடு..!

தமிழகத்தில் அரசுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் என அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுவது பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை உலுக்கிய குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

தெரிஞ்சா தகவல் சொல்லுங்க..! நீட் தேர்வு முறைகேட்டில் 10 வடமாநில இளைஞர்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி..!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் ஈடுபட்டவர்கள் புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.

வினாத்தாள் மாயம்..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆண்டு பருவத்தேர்வில் மதிப்பீடு செய்யப்பட்ட 138 வினாத்தாள்கள் பண்டலில் ஒன்று மட்டும் மாயமாகி பிறகு அது கல்லூரி பேருந்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய தனிக்குழு பல்கலைக்கழக துணை பதிவாளர் முதல் கடைநிலை ஊழியர் உட்பட 15 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here