சாமி பட பாணியில் தப்பி சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – அடுத்த கட்ட நடவடிக்கையாக வங்கி கணக்கு முடக்கம்!!

0

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த, ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காவல்துறை தீவிரம் :

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, பல நபர்களிடம் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்தார் என புகார் எழுந்தது. அவரோடு சேர்த்து, அவரது தனிச் செயலாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்து பாண்டியன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, விருதுநகர் காவல் துறையினர் ராஜேந்திர பாலாஜி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, டிசம்பர் 17ஆம் தேதி தலைமறைவான இவரை இதுவரை கண்டறிய முடியவில்லை. சாமி படத்தில் வில்லன் கிளைமாக்ஸில் தப்பித்து செல்வது போல், கார் மாறி, மாறி விருதுநகர் விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது ஒருபுறமிருக்க, இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இவரது 6 வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் தற்போது முடக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் குறித்த இந்த குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here