இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்கு வாக்காளர் அடையாள அட்டை இன்றியமையாத ஒன்று. அதன்படி 18 வயது நிரம்பிய அனைவரும் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த மாநிலத்தில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் இந்த முகாம்கள் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்ற நிலையில், இனி ஒவ்வொரு காலாண்டிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 18 வயது நிறைவடைந்த அடுத்த காலாண்டில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
தூக்கி விட்டவரை எட்டி கூட பார்க்காத விஜய்.., ச்சா.., தளபதி இந்த அளவுக்கு இரக்கம் இல்லாதவரா?
அதன் பின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு தகுதி பெற்றவர்களின் பெயர் சேர்க்கப்பட்டு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் “Voter Helpline App” என்ற செயலி தரவிறக்கம் செய்து அதில், https://voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மட்டும் தமிழகத்தில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.