மாலை நேரத்தில் டீ உடன் ஏதாவது தின்பண்டம் கொறித்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. மேலும் அப்படி சாப்பிடும் தின்பண்டங்கள் அனைத்தும் கடையில் இருந்து வாங்கி வரப்படும் உணவு வகைகளே. அவற்றில் சில நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக கூட இருக்கலாம். இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் அதை தவிர்க்க மாலை நேர ஸ்னாக்ஸ்களை இனி நாம் வீட்டிலேயே செய்து பழகுவோம். அதில் முதல் பதிவாக கேரளா ஸ்டைல் பழம்பொரி எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
நேந்திரம் பழம் – 2
மைதா மாவு – 1 கப்
சீனி – 1/2 கப்
சோடா உப்பு – 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஓரளவுக்கு பழுத்த நேந்திரம் பழத்தின் தோலை உரித்து அதை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சீனி, உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக ஒன்றோடு ஒன்று கலந்து கொள்ளுமாறு கிளறி கொள்ளவும். அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி படாமல் கலக்கி கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த மாவு கலவையில் ஒவ்வொரு பழ துண்டுகளாக அதில் முக்கி அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். தற்போது சுவையான கேரள ஸ்டைல் பழம்பொரி ரெடி. இதை செய்து வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டையும் பெற்று விடுங்கள்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்