பாபா ராம்தேவ் தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களின் அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது என்று பேசியுள்ளார்.
Instagram => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!
என்னை கைது செய்ய முடியாது:
யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசவிரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியது; ஏனென்றால் கொரோனா தடுப்பூசி குறித்து தவறாகவும், உண்மைக்கு மாறாகவும் பிரச்சாரம் செய்து உள்ளார்.
தற்போது இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம் தேவ் “ அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் இவரை கைது செய்யவேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர்.
இதனை கண்டிக்கும் வகையில் அவ்வாறு பேசுபவர்களின் “அப்பாக்கள் வந்தால்கூட இந்த சுவாமி பாபா ராம்தேவை கைது செய்ய முடியாது.” எனத் தெரிவித்தார். அகங்காரத்தின் உச்சத்தில் ராம்தேவ் பேசினார். இந்த வீடியோ பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!