எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது அப்பத்தா போட்டிருக்கும் மாஸ்டர் பிளான் அம்பலமாகியுள்ளது. அப்பத்தாவை சாதாரணமாக நினைத்தால் படு கில்லாடியாக இருக்கிறார். அதாவது அவரது ஸ்டார்டிங் பிளானே சக்தியுடன் ஜனனியை சேர்த்து வைப்பது தான். அதாவது சக்தி மற்ற மூன்று அண்ணன்களை போல இல்லை.
மேலும் குணசேகரனுக்கு சரியான ஆப்பு வைக்கும் விதமாக மூன்று மருமகள்கள் மேல் அந்த 40% ஷேரை எழுதி வைத்து விட்டார். இதுதான் குணசேகரனுக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய அடி. கதிர், ஞானம் இருவருமே குணசேகரனை மலை போல நம்பி கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை உடைக்க தான் அப்பத்தா பிளான் போட்டு கொண்டுள்ளார்.
அப்பத்தா அமைதியாக இருப்பது போல தெரிந்தாலும், எதோ பெருசாக செய்து விட்டு தான் அமைதியாக இருக்கிறார். இனி வரும் எபிசோடுகள் முழுக்க அனல் பறக்கும் விதமாக தான் இருக்க போகிறது. ஏனெனில் சக்தியிடம் மறுபடியும் பேச ஆரம்பித்து விட்டார் ஜனனி.
கர்ப்பமான முல்லை., பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த ட்ராக் இதான்., வெளியான சூப்பர் அப்டேட்!!
அதுவும் குணசேகரன், விசாலாட்சி முன்பே தைரியமாக சக்தியிடம் பேச ஆரம்பித்து விட்டார். அது தான் அனைவருக்குமே பெரிய ஷாக். குணசேகரன் கொஞ்சம் கொஞ்சமாக தோற்று கொண்டிருக்க உக்ரமடைந்து வருகிறார். பதிலுக்கு அவர் எதாவது செய்ய அப்பத்தா அதற்கு பதிலடி கொடுக்க இப்படியே தான் கதை நகர போகிறது.