எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குணசேகரன் ஒரு நாடகத்தை போட்டு அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையை கிளப்பி விட்டார். எப்படியாவது சொத்தை அபகரிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு கொண்டுள்ளார். இது தெரியாமல் கதிர், ஞானம், சக்தி மூவரும் அண்ணன் சொல்றது தான் சரி என்று ஆடிக் கொண்டுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்பத்தா அனைவருக்குமே சரியான பதிலடி கொடுக்க குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. சக்தி ஜனனியை வீட்டை விட்டு அனுப்ப முடிவெடுத்து நேராக செல்ல அங்கு அதை விட பெரிய ட்விஸ்ட். அதாவது ஜனனி தனியாக சக்தியிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு சக்தியும் ஒத்து கொள்கிறார். இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்றே தெரியாமல் ரசிகர்கள் பலரும் ஆவலில் உள்ளனர். இந்நிலையில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது சக்தியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஜனனி சொல்லுவாராம். இதனால் சக்தியின் மனசு மாற ஆரம்பிக்குமாம். ஏற்கனவே ஜனனியின் நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு மீண்டும் காதல் வர ஆரம்பிக்குமாம். மேலும் அப்பத்தா செய்ய போகும் விஷயம் தான் மாஸ். அதாவது 40% ஷேர் அப்பத்தா பெயரில் உள்ளதால் ஜனனியை பதவியில் உட்கார வைப்பாராம். இனிமேல் தான் சீரியல் சூடுபிடிக்கவுள்ளது.