எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது அப்பத்தா, ஜனனி உள்ளிட்டோர் ஆதிரைக்காக போராடி வருகின்றனர். என்ன தான் ஆதிரை ஜனனிக்கு எதிராக பல விஷயங்களை செய்திருந்தாலும் அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.
குணசேகரன் இந்த விஷயத்தை விரைவில் முடிச்சே ஆகணும் என்று ஆதிரைக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும் என்று தீயாய் வேலை பார்த்து வருகிறார். குடும்பம் மொத்தமும் இப்பொழுது ஆட்டம் கண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சக்தி வேறு தங்கைக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது ஆதிரைக்கு திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார் நம்ம குணசேகரன். இதனால் ஆதிரை தற்கொலை முயற்சி வரை செல்வாராம். இதனால் குடும்ப கவுரவமே ஆட்டம் கண்டு விடுமாம். இப்படி இருக்க இப்பொழுது நடந்த சம்பவத்திற்கு காரணம் ஜனனியும் அப்பத்தாவும் தான் என்று கோவத்தில் கொந்தளிக்கும் குணசேகரன் அவர்களை கொல்ல மீண்டும் திட்டம் போடுவார்களாம்.