சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவிடம் உள்ள 40% ஷேரை வாங்க குணசேகரன் இல்லாத பித்தலாட்டத்தை எல்லாம் செய்கிறார். இப்போது கூட அப்பத்தான் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டலில் உள்ளார். ஆனால் இவருக்கு சிகிச்சை பார்க்க ஜனனி சக்தியிடம் சுத்தமாக பணம் இல்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை சாக்காக வைத்துக் கொண்டு அப்பத்தாவை நான் பார்த்துக் கொள்கிறேன் என வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் குணசேகரன். இது எதுவும் தெரியாத சக்தி, ஜனனி அப்பத்தாவை எங்கெங்கோ தேடி அலைகின்றனர். இன்னொரு பக்கம் ஒரு நர்சை வைத்து அப்பத்தாவுக்கு வைத்தியம் பார்க்கும் குணசேகரன் மிகப்பெரிய திட்டத்தை தீட்டுகிறார்.
அதாவது இனி வரும் எபிசோடுகளில் அப்பத்தாவிடம் உள்ள 40% ஷேரை வாங்குவதற்கு அவரின் கைரேகையை பயன்படுத்துவாராம். இதன் மூலம் முழு சொத்தையும் தன் வசப்படுத்தி ஜனனி சக்திக்கு ஆட்டம் காட்டுவாராம். இத்தன நாள் அப்பத்தாவின் துணையுடன் ஜனனி தான் நினைத்ததை செய்தார். ஆனால் இது போன்று நடந்தால் இனி ஜனனி சக்தியின் நிலைமை என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையை அவர்கள் சமாளிப்பார்களா?? என பார்க்கலாம்.