சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் இப்பொழுது ட்விஸ்டுகளுடன் காட்சிகள் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சக்தி இப்பொழுது மனம் திருந்தி விட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுவே சீரியலுக்கு பெரிய ப்ளஸ். அதுமட்டுமில்லாமல் சக்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஜனனி மீது பாசம் வரவும் ஆரம்பித்து விட்டது. இது குணசேகரனுக்கு புரிந்தும் விட்டது. இது என்னோட தலையெழுத்து என்று புலம்பி கொண்டுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது சக்தி மொத்தமாக ஜனனி பக்கம் சாய்ந்து, அவருடன் வாழ ஆசைப்படுவாராம்.
சக்தி பற்றி ஜனனியிடம் அப்பத்தா நல்ல விதமாக ஏற்கனவே சொல்லி வைத்திருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளது. இனி வரும் எபிசோடுகளில் இந்த கதையை வைத்து தான் ஓட்ட போகிறார்கள். எப்படியோ அப்பத்தா எடுத்த முயற்சியில் ஒரு விஷயம் சக்ஸஸ் ஆகி விட்டது. இனிமேல் தான் குணசேகரனுக்கு ஆப்பு வெயிட்டிங்கில் உள்ளது.