சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரையின் திருமணத்தின் முடிவில் தான் குணசேகரனா?? இல்ல ஜனனியா?? இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று தெரியும். ஒரு பக்கம் ஜனனி அருணை மறைத்து வைத்திருக்கும் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ளும் கதிர் அந்த உண்மையை நிரூபிக்க முடியாமல் போராடுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது மட்டும் அல்லாமல் அவருக்குத் தெரியாமல் ஜனனி ஃபோனை எடுத்து அதில் ஏதும் தகவல் இருக்கா என்று பார்க்கிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா அவ்வப்போது கண் முழித்து ஜனனியிடம் ஏதோ சொல்ல முயற்சிக்க பின் சொல்லாமல் மயங்கி விடுகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன், கரிகாலன்-ஆதிரையின் திருமணத்தை தடபுடலாக நடத்துவதற்கு பலத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…, இதை செய்தால் தான் நலத்திட்டம் அனைத்தும் கிடைக்கும்??
இப்படி கொஞ்சம் கூட சுவாரசியத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோட்டில் ஜனனி அருணை மறைத்து வைத்திருக்கும் விஷயத்தை குணசேகரன் கண்டுபிடித்து விடுவாராம். உடனே கரிகாலன் ஆதிரையின் திருமணத்தை நடத்த ஏற்பாடுகளை செய்வாராம். இதை தெரிந்து கொண்ட ஜனனி யாருக்கும் தெரியாமல் ஆதிரையை அழைத்துச் சென்று அருணுக்கு திருமணத்தை நடத்தி விடுவாராம். அடுத்து வரும் எபிசோடுகளில் இது போன்று தான் கதை நகரும் என தகவல் வெளியாகி உள்ளது.