சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து வரும் எபிசோட் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாள் குணசேகரனுக்கு அடங்கியிருந்த மருமகள்கள் இப்போது எதிர்த்து பேச ஆரம்பித்து விட்டனர். ஜனனி குணசேகரிடம் நீங்க என்ன செஞ்சாலும் ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் செய்து வைப்பேன் என சவால் விடுகிறார். பட்டம்மாள் பாட்டி கூட உன்னால முடிஞ்சத பாரு என மிரட்டுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நேரத்தில் ஈஸ்வரி வீட்டிற்கு வர அப்போது குணசேகரனின் அம்மா ஈஸ்வரியை கண்டபடி பேசுகிறார். பின் குணசேகரனிடம் பேசி செல்லும் ஈஸ்வரியை உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா வீட்ல உள்ள எங்கள பத்தி மேடையில பேசுவ. இப்போ எதுக்கு இங்க வந்திருக்க என குணசேகரன் சத்தம் போடுகிறார். அதற்கு ஈஸ்வரி நான் பேசுனதுல என்ன தப்பு உண்மையதான சொன்னேன் என சொல்கிறார்.
இதைக் கேட்ட குணசேகரன் ஆடிப் போகிறார். இத்தன நாளும் பட்டம்மாள் பாட்டி தான் குணசேகரனை எதிர்த்துப் பேசினார். ஆனால் இப்போது ஈஸ்வரியும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார். இதை வைத்து பார்க்கும் போது அடுத்த வரும் எபிசோடுகளில் பட்டம்மாள் பாட்டி சும்மாவே இருந்தாலும் ஈஸ்வரி குணசேகரனின் கொட்டத்தை அடக்குவார் என்று தான் தெரிகிறது.