எதிர் நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சக்தி குந்தவை திருமணம் நடக்குமா?? நடக்காத?? என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து வருகிறது. ஆனால் சக்தி குந்தவை கல்யாணத்தை நிறுத்த வாசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
மறுபுறம் சக்தி கல்யாணத்தை வைத்து அண்ணன் தம்பிக்குள் சண்டைகள் வந்து கொண்டே இருந்தது. இதற்கு முடிவு கட்ட குணசேகரன் குந்தவையின் அப்பாவை உடனடியாக சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு வர சொல்கிறார். அவரின் பேச்சை தட்டாமல் குந்தவையின் அப்பாவும் மதுரைக்கு வருகிறார்.
இதை வைத்து பார்க்கும்போது அவர் குந்தவை-சக்தி திருமணத்தை உடனடியாக நடத்த போகிறார் என்று தான் தெரிகிறது. ஆனால் அதுதான் இல்லை. இப்போது வெளியாகிய ப்ரோமோவில் குந்தவையின் அப்பா தாலியுடன் உடனடியாக கல்யாணத்தை நடத்தலாம் என்று சொல்கிறார். ஆனால் குணசேகரன் இந்த கல்யாணம் நடக்காது என கூறுகிறார். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த கல்யாணத்தை நடத்துவதில் குணசேகரன் தான் தீவிரமாக வேலைகளை பார்த்து வந்தார். திடீரென அவர் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஏதோ பெரிய பிளானுடன் தான் காய் நகர்த்தி வருகிறார் என்று தெரிகிறது. எனவே சக்தி குந்தவை கல்யாணத்தை விஷயத்தில் அவர் ட்விஸ்ட் செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் ஜனனி பயங்கரமான எதோ பிளானில் வேறு இருக்கிறார். தொடர்ந்து சக்தியுடன் வாழ போராடுவாரா? அல்லது வாசுவுடன் சேர்ந்து பழி வாங்குவரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.