எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனி வீட்டை விட்டு வெளியே போன விஷயம் அவளின் அப்பாவிற்கு சக்தி அண்ணன் மூலம் தெரிய வருகிறது. இதனால் ஜனனி அப்பா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ப்ரோமோவில் ஜனனியின் அத்தை பெண்ணான வாசுவுக்கு, சக்தி- குந்தவைக்கு நடக்கப்போகும் திருமணம் விஷயம் தெரிய வருகிறது. இதை வாசு ஜனனியிடம் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனனியிடன் அந்த குடும்பத்தில் இருப்பவர்களை கம்ப்ளைன்ட் செய்து களி தின்ன வைக்கணும் என கடும் கோபத்தில் சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு இவ்வளவு அழகான தங்கையா?? ஹீரோயினுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!
ஆனால் ஜனனி இப்போது தான் நான் என் கேரியரை நோக்கி செல்கிறேன். மீண்டும் என்னை அந்த குழிக்குள் தள்ளி விடாத என கறாராக கூறுகிறார். ஆனா ஜனனி என்ன சொன்னாலும் வாசு கேட்க மாட்டார் என நமக்கு தெரிஞ்ச விஷயம் தான்.
அதன்படி பார்த்தால் இனி வரும் எபிசோடுகளில் ஜனனி, சக்தி மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வில்லை என்றாலும் கண்டிப்பாக வாசு கம்ப்ளைன்ட் செய்வாராம். அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர் பெண் குந்தவையிடம் ஜனனி பட்ட கஷ்டங்களை சொல்வாராம். இதனால் குந்தவை சக்தியை விட்டு விலகி விடுவாராம். இது போன்ற ட்விஸ்டுகள் தான் இனி வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.