கோலிவுட் திரையில் இயக்குனர் நடிகர் என ஜொலித்து கொண்டிருந்த மாரிமுத்து தற்போது சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் களமிறங்கி கலக்கி வருகிறார். இதில் இவரின் அசத்தலான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோக இந்த சீரியலில் இவர் ”ஏ இந்தாம்மா” என்ற வார்த்தை இணையத்தில் மீம்ஸாக வைரலாக உலா வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு தன்னுடையமொபைல் no கொடுத்துள்ளதாக இவர் சர்ச்சையில் சிக்கியதாக நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையாக தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு இவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ”நான் மிதவாதி இல்லை, யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தீவிரவாதி.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்., வெறும் ரூ. 300 போதும்! அரசு பஸ்ல ஒரு நாள் Full ஆ ஊர் சுத்தலாம்!!
எல்லாருக்கும் பிடித்தது போல் நாம் வாழ்வது மிகவும் கடினம். எப்பேற்பட்ட நல்ல மனிதன் காந்தியையே சிலருக்கு பிடிக்கவில்லை, அப்படி இருக்கப்போ நான் சாதாரண மனிதன் என்னை எல்லாரும் பிடிக்கணும் என எதுவும் இல்லை. அதே சமையம் நான் கோபப்பட்டால் அதிகமாக கோபப்படுவேன். பாசம் காட்டினாலும் அளவுக்கு மீறி காட்டுவேன் என துணிச்சலாக பேசியுள்ளார்.