அதிமுக பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்ததாக ஓபிஎஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மீது கொள்ளை புகார்:
அதிமுகவின் செயற்குழு பொதுக்கூட்டம் நடத்த தடை இல்லை என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து நேற்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால் ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை மீறி அதிமுக அலுவலகத்தில் உள்ளே சென்றார் ஓபிஎஸ்.
இந்த தகவலை அறிந்த காவல்துறை விரைந்து சென்று தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.மேலும் அங்கிருந்து செல்லாமல் இருந்த ஓபிஎஸ் அவர்களை காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொள்ளையடித்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்