தமிழக சட்டமன்ற தேர்தல் – மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!!

0

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளனர். தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சி விருப்ப மனு விநியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று முதல் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தற்போது இதனை இன்று சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் வைத்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் துவக்கி வைக்க உள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்!!

அதன் படி முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டிடுவதற்கு விருப்ப மனுவை தாக்கல் செய்கிறார். மேலும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் போட்டி இடுவதற்கு விருப்ப மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இவர்கள் இருவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here