தமிழகத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் அனைவரும் மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் வகையில் ஆட்சியை அமைத்துள்ளோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரை வேலைகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அனைவரும் மூக்கில் விரல்வைத்து ஆச்சரியம் அடையும் வகையில் ஆட்சியை அமைத்துள்ளது. மேலும் தற்போது இந்த தேர்தலிலும் நாங்கள் தொடர் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக அயராது உழைத்துள்ளோம். எங்களுடன் சேர்ந்த கூட்டணி கட்சிகளும் அதற்காக மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். புயல் மழை என அனைத்து இயற்கை பேரிடர்களை மிக வெற்றிகரமாக சமாளித்துள்ளோம்.
மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்று வெற்றி மாலையை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களில் சமர்பிப்போம் என்று உறுதி கூறியுள்ளனர். மேலும் நாங்கள் ஆற்றாத வளர்ச்சி பணிகள் எதுவும் உண்டா?அதுமட்டுமல்லாமல் நாங்கள் மக்களுக்கு செய்யாத தொண்டுகள் எதுவும் உண்டா?? என்று கூறி இபிஎஸ்-ஓபிஎஸ் பெருமிதம் கொள்கின்றனர்.