வருங்கால வைப்பு நிதி ஆணையமான, EPFO ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரை இல்லாத சூப்பர் அறிவிப்பை மூன்று நிபந்தனைகளுடன் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
சூப்பர் அறிவிப்பு:
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் பிஎஃப் வரவு செலவு கணக்கினை, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO கவனித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆணையம் தங்கள் பயனர்களுக்காக சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, EPFO நிறுவனத்தில் பிஎஃப் கணக்கு வைத்திருப்போர், தங்களின் EPF கணக்கிலிருந்து எல்ஐசியின் பிரீமியர் தொகையை செலுத்தும் வசதியை, அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதேபோல், பிஎஃப் கணக்கிலிருந்து, எல்ஐசி-யில் பணம் எடுக்க சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி, இந்த மாற்றத்தை பெற படிவம் 14 ஐ பெற்று சமர்ப்பித்ததும், எல்ஐசியின் பாலிசியும், உங்கள் EPFO கணக்கும் ஒன்றாக இணைக்கப்படும்.
ஆன்லைன் லோன் ஆப்க்கு எதிராக வழக்கு., தற்கொலைக்கு தூண்டியதாக மனு – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இந்த இணைப்பை நீங்கள் சாத்தியப்படுத்த உங்கள் கணக்கில், குறைந்தது 2 மாத பிரீமியர் தொகையாவது இருக்க வேண்டும். இது போக EPFO கணக்கு வைத்திருப்போருக்கு எல்ஐசி பாலிசிக்காக மட்டுமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மற்ற நிறுவனங்களுக்கு கிடையாது. இதன் மூலம், தேவைப்படும் பயனர்கள் திணைகள் பிஎப் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம்.