ஐசிசி T20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் இடம் பிடித்துள்ள வீரருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயங்களுடன் உலக கோப்பையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் T20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐசிசி கட்டளையிட்டது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் T20 உலக கோப்பையில் பங்கேற்கும் அணி வீரர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி T20 உலக கோப்பைக்கு தயாராக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அந்த அணியில் இடம் பிடித்த நட்சத்திர வீரரான பாரிஸ்டோவுக்கு விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர் T20 உலக கோப்பைக்கான அணியில் ஜோன்ஸ் ராய் நீக்கப்பட்டதை தொடர்ந்து இவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது பாரிஸ்டோ உலக கோப்பையில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் விபத்தின் போது இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சரியாகும் நிலை உள்ளது.
இதனால் இவர் டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதில் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாரிஸ்டோ இங்கிலாந்து அணிக்காக ஆஸ்திரேலிய மண்ணில் T20 உலக கோப்பை விளையாட முடியாத நிலை ஏற்பட்டது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் எனது உடல் நிலையை சரி செய்து அணிக்கு திரும்புவேன் எனவும் பதிவிட்டுள்ளார்.