பேட்மிண்டன் தொடருக்கான முதல் சுற்றில் இந்தியாவின் PV.சிந்து, சீனாவின் YM. ஜாங்சூகை எதிர்கொண்டு தோல்வி அடைந்துள்ளார்.
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் மார்ச் 14 முதல் 19 வரை இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் HS.பிரணாய், எல். சென், எஸ். நேவால், எஸ். குராசாடா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் HS பிரணாய் தைவான் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் இந்தியாவின் PV.சிந்து, சீனாவின் YM. ஜாங்சூகை எதிர்கொண்டார்.
இவர்கள் இருவருக்கு இடையில் நடந்த அனல் பறக்கும் ஆட்டத்தில் 21-17, 21-11 என்ற நேர் செட் கணக்கில் சீனா வீரரிடம் தோல்வி அடைந்தார். இதனால் PV.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.