நாட்டில் விதிக்கப்பட்ட அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்  – பிரதமர் அதிரடி அறிவிப்பு!!

0

இங்கிலாந்து நாட்டில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முடிவு:

இங்கிலாந்து நாட்டில் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. இது போக, டெல்டா வகை வைரஸ் பரவலும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால், அந்த நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசின் சார்பாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ளது. மேலும், பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதன் படி, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும், வீட்டில் இருந்தே பணி செய்வதை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் வெளியே வர அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here