கோலிவுட் திரையில் நடிகர், அரசியல்வாதி என பன்முக திறமையுடன் வலம் வருபவர் தான் நடிகர் உதயநிதி. இவர் ஹீரோவாக நடித்திருக்கும் ‘மாமன்னன்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படி சினிமாவில் நடித்து வரும் இவர் மற்றொரு பக்கம் அரசியலிலும் தீவிரமாக இருந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் இவர்களின் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் கிருத்திகா உதயநிதி பெயரில் உள்ள 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
விஜயுடன் நேருக்கு நேர் மோத ரெடியான பிரபல நடிகர்… லியோவுக்கே ஸ்கெட்ச் போட்ட ஆக்சன் திரைப்படம்!!
மேலும் இவரது வங்கி கணக்கில் இருந்த 34 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுபோக மதுவிலக்கு, மின்சாரம், மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த வாரம் ஐடி ரைடு நடந்ததை தொடர்ந்து, இன்று அவரது தம்பி அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.