
கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள காசா பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இஸ்ரேலை போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா அரசு பங்கேற்காமல புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கிடையில் இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த 90,000 பாலஸ்தீனியர்களின் பணி உரிமத்தை ரத்து செய்து வெளியேற்றப்பட்டது. இதனால் இஸ்ரேலுக்கு நீண்ட வருடமாக நட்புக்கரம் நீட்டி வரும் இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்த இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு லட்சம் இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.