மத்திய அரசு ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா எனும் கொல்லுயிரிக்கு எதிராக மக்களை காக்கும் ஆயுதமாக விளங்குவது தடுப்பூசி ஒன்றே. இந்தியாவில் தற்போது வரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்து வருகின்றன.
இந்நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 85 சதவீத செயல்திறனுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் ஏற்படாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மத்திய அரசு, ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என தற்போது அனுமதி அளித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்