ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, வாங்கும் முடிவை தற்போது தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் பதிவு:
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்ததாக தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலை, ட்விட்டர் நிறுவனமும் பகிர்ந்திருந்த நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் குறிப்பிடத்தகுந்த சில மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்திருப்பதாக எலான் மஸ்க் அண்மையில் அறிவித்தார்.
இது குறித்த முக்கிய முடிவு ஒன்றை, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதாவது ட்விட்டரில் உலா வரும் போலி கணக்குகள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டியிருப்பதால் தற்போதைக்கு இந்த நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அந்த ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Twitter deal temporarily on hold pending details supporting calculation that spam/fake accounts do indeed represent less than 5% of usershttps://t.co/Y2t0QMuuyn
— Elon Musk (@elonmusk) May 13, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்