மறுபடியும் போச்சா – எலோன் மஸ்க்கிற்கு நிகழ்ந்த சோகம்!!

0

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கிற்கு தற்போது அதிர்ச்சியான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எலோன் மஸ்க்:

இந்த ஆண்டு தொடக்கம் முதல் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் இறக்கத்தில் கண்டு வருகிறது. தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த எலோன் மஸ்கின் பங்குகள் பின்பு அதிரடியான சரிவை கண்டது. அதன்பின்பு பங்குசந்தைகளில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிரடியான உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக எலோன் மஸ்கின் சொத்து மதிப்பும் அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து இந்த ஏற்ற இறக்கம் காரணமாக பணக்காரர்கள் பட்டியலிலும் மாற்றம் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்ட பொழுது அமேசான் நிறுவனர் பெஸோஸ் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். பின்பு கடந்த 15ம் தேதி நிலவரப்படி டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததால் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பும் உயர்ந்து பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். பின்பு அதற்கு அடுத்து வந்த நாட்களில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக குறைந்தது.

ஆரம்பமே இப்படியா?? அதிமுக, மநீம கட்சி வேட்பு மனுக்கள் நிறுத்தி வைப்பு!!

இதன் காரணமாக எலோன் மஸ்கின் சொத்து மதிப்பும் குறைந்தது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 6.9 சதவீதம் குறைந்ததால், இவரது சொத்துமதிப்பில் இருந்து 11 பில்லியன் டாலர் குறைந்தது. எனவே 169 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலோன் மஸ்க். கடந்த வாரம் இவரது சொத்துமதிப்பு 182 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அமேசான் நிறுவனர் பெஸோஸ் 178 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here