தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி நிர்வாகங்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி பேருந்தை மே மாதம் முதல் ஆய்வு மேற்கொண்டு தகுதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்ட சோதனை இன்றும் (ஜூன் 3), நாளை மறுநாளும் (ஜூன் 5) நடத்தப்படுகிறது. இந்த தகுதி சான்றிதழை பெறாத பள்ளி பேருந்து இயக்கப்பட்டால், பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல் நிர்வாகத்திற்கு அபராதமும் விதிக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.
டெஸ்டில் அதிவேக 11000 ரன்களை கடந்த டாப் 10 வீரர்கள்…, ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!!
வருகிற ஜூன் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில் இதுவரை தகுதி சான்றிதழ் தணிக்கை ஆய்வுக்கு வருகை தராத பேருந்துகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.