நாம் சமூக தளங்களின் வாயிலாக பலரின் திறமைகளை அறிந்தும், அவர்களின் திறமையை பாராட்டியும் வருகிறோம். அந்த வகையில் தாய்லாந்தை சேர்ந்த ஒரு யானை தன் உருவத்தை ஓவியமாகவரைந்து உள்ளது. மேலும் இந்த வரைபடம் நான்கு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
விலங்குகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண அமைப்பு உள்ளது. மேலும் ஒரு சில விலங்குகளை தெய்வமாகவும் வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் தங்களின் எஜமானர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அவர்களை காப்பாற்றுவது, மேலும் அவர்களின் உற்றாருக்கு ஆறுதல் கூறுவது என பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். மேலும் சில விலங்குகள் கண்ணீர் சிந்திய சம்பவங்கள் நாம் அறிந்ததே. இன்னும் சில விலங்குகளின் பல திறமைகளை நாம் அவ்வப்போது அறிந்து கொண்டு தான் வருகிறோம்.
அந்த வகையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 9 வயது பெண் யானை ஒன்று ஒரு ஓவியத்தை வரைந்து உள்ளது. இந்த யானை தன் தும்பிக்கையால் தூரிகையை பிடித்துக் கொண்டு ஓவிய போர்டு மீது தன் உருவத்தையும், மற்றொரு யானையின் உருவத்தையும் வரைந்து அசத்தி உள்ளது. யானையின் இந்த செல்பி ஓவியம் 4 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது. மேலும் அந்த யானை வரைந்து அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
A painting by an elephant in Thailand sold for $5.5k+ in an online fundraiser for the Maetang Elephant Camp.
The painting shows a silhouette of 9-year-old elephant Nong Thanwa and her friend Dumbo. Nong painted it herself using her trunk ?? pic.twitter.com/YZZqJ3t3Ux
— NowThis (@nowthisnews) July 7, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்