வாகன ஓட்டிகளே., தமிழக அரசின் புதிய நடவடிக்கை., இனி ஒன்னும் பண்ண முடியாது??

0
வாகன ஓட்டிகளே., தமிழக அரசின் புதிய நடவடிக்கை., இனி ஒன்னும் பண்ண முடியாது??
வாகன ஓட்டிகளே., தமிழக அரசின் புதிய நடவடிக்கை., இனி ஒன்னும் பண்ண முடியாது??

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் உள்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது தலைக்கவசம் அணியாமல் இருப்பவர், அதிவேகத்தில் செல்பவர், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துதல் உள்ளிட்ட 12 விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மின்னணு முறையில் அபராதம் வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் உடலில் வெளிப்படையாக பொருத்தப்பட்ட கேமரா, ANPR, டேஸ்போர்டு உள்ளிட்ட கேமராக்கள் அதிக விபத்து ஏற்படும் பகுதி மற்றும் கூட்ட நெரிசலான இடங்களில் பொருத்தப்படும்.

இந்திய அணிக்கு உலக கோப்பையில் காத்திருக்கு பெரிய சவால்…, பிட்ச் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்த கேமராவில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு தெளிவான காட்சிகளை கொண்டு மின்னணு முறையில் அபராதம் விதிக்க அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஆவணங்கள் நீதிமன்றங்களில் சாட்சி பதிவாகவும் சமர்ப்பிக்கலாம். இது போன்ற கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான எச்சரிக்கை வாசகங்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும் இடங்களில் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த மின்னணு கேமராக்கள் சென்னை மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி உட்பட 10 லட்சத்துக்கும் மேல் வாழும் மக்கள் பகுதிகளில் பொருத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here