தமிழகத்தில் மே 2 நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவுகள் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!

0

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கான முடிவுகள் வருகிற மே மாதம் 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் வெளிவரும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தல்:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் தேர்தலை மிக சிறப்பாக தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2ம் தேதி ஊரடங்கு அமலில் இருக்காது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று மாலை, தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு தடுப்பூசி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இனி வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு – மாநில அரசு அதிரடி!!

தற்போது இதுகுறித்து பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சாகு கூறுகையில், வருகிற மே மாதம் 2ம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 7 அல்லது 10 மேஜைகள் அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றும் வாக்கு இயந்திரங்களை வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து அதிகாரிகளிடம் அறிக்கை வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here