இன்று உள்ள நவநாகரிக உலகில் பெண்கள் அனைவரும் தங்கள் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். ஆரோக்கியம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தான் நடந்து கொள்கின்றனர்.
அழகா? ஆரோக்கியமா?
இன்று பெரும்பாலான பெண்கள் தங்கள் முக அழகிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு ஒரு உறுப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதில் அவர்கள் பிரதானமாக செய்வது புருவமுடி திருத்துதல் (threading) எனப்படும் த்ரெட்டிங். இதனை அனைத்து வயது பெண்களும் கண்டிப்பாக மாதத்திற்கு ஒரு முறையாவது செய்கின்றனர்.
இதன் மூலம் ஏற்படும் பாதிப்பு அவர்களுக்கு தெரிவதில்லை,செய்பவர்களுக்கும் தெரிவதில்லை. ஒருவருக்கு உடம்பில் பல வர்மா நாடிகள் இருக்கும். அதிலும் குறிப்பாக முகத்தில் அதிகமாக இருக்கும். ஒருவர் இறந்து போக போகிறார் என்றால் அவர் இறப்பதற்கு முன் சில நிமிடங்களில் புருவ முடிகள் உதிர்ந்து விடும். ஆனால், இந்த த்ரெட்டிங் முறையை செய்பவர்களுக்கு வர்மா நாடிகள் எங்கு உள்ளது என்பது தெரியாது.
என்ன பிரச்னை??
அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு முடியை திருந்துவார்கள், இதன் மூலம் பிராண சம்மந்தமான பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது. இது பெண்களை மட்டும் பாதிக்காமல் அவர்கள் பெற்று எடுக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும். இது மட்டும் அல்லாமல், இளவயது முதிர்ச்சி, ரத்தஅழுத்தம் போன்ற பிரச்சனைகளும் வரும் வாய்ப்புகள் உள்ளது.
இனியேனும், பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.