நம் முன்னோர்கள் அவர்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க அதிகமாக பயன்படுத்தி வந்த ஒரு பயனுள்ள இயற்கை மூலிகை தான் ஆலம் விழுது மற்றும் இலைகள். இந்த ஆல இலைகளை வைத்து நம் முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- ஆலம் இலை – 11
- ஆலம் வேர் – ஒரு கைப்பிடி
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
செய்முறை விளக்கம்
ஆலம் விழுது ஹேர் ஆயில் தயாரிப்பதற்கு முன் நாம் எடுத்து வைத்துள்ள ஆலம் இலை மற்றும் விழுதுகளை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். இதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை ஊற்றவும். என்னை சூடானவுடன் நாம் கழுவி உலர்த்தி வைத்துள்ள ஆலம் விழுது மற்றும் இலையை எண்ணெயில் போட்டு கொதிக்க விடவும்.
வறண்டு போன உங்க சருமத்துக்கு மினுமினுப்ப கொண்டு வரணுமா., இதோ சூப்பரான டிப்ஸ்!!
நன்றாக எண்ணெய் கொதித்த உடன் ஒரு 20 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்து,ஆயிலை ஆற வைத்து சல்லடையில் இருத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். நாம் தயாரித்து வைத்துள்ள இந்த மூலிகை ஆயிலை தினமும் நம் தலையில் தேய்த்து வருவதன் மூலம் நாம் இழந்த முடி மீண்டும் வளர நமக்கு உதவியாக இருக்கும்.