விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியல் தற்போது 2 வருடத்தை கடந்து சாதனை புரிந்துள்ளது.
ஈரமான ரோஜாவே
ஈரமான ரோஜாவே சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் மாறனை காதலித்து வந்தார் மலர். திருமணம் ஆக போகும் நிலையில் மாறன் விபத்தால் இறந்து விடுகிறார். இதனால் மலர் பைத்தியம் பிடித்தது போல ஆகி விடுகிறார். வேறு வழியில்லாமல் வெற்றியை திருமணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் வெறுப்பை காட்டி வந்த மலர் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார். அதன் பிறகு காதல் மலர்ந்து தற்போது ஒன்றாக சந்தோசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இடையில் வெற்றி மீது தேவையில்லாத பழி வந்து விழுக அதனை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து வெற்றியை நிரபராதி என்று நிரூபித்தார்.
இப்பொழுது எல்லா பிரச்சனைகளும் முடிந்து மலர் கர்ப்பமாக இருக்க தற்போது குழந்தை பிறக்கும் தருவாயும் வந்து விட்டது. இந்நிலையில் தான் இந்த சீரியல் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது 2 வருடங்கள் முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது.