ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா செய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவித்து வருகிறார். பார்வதியை மாட்டியும் விட முடியாமல் பார்த்திபனிடம் உண்மையையை சொல்லவும் முடியாமல் தவித்து வருகிறார். பார்த்திபனின் அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக மனது மாறி இருந்தார் காவியா. இப்பொழுது இந்த காதல் கோட்டையும் ஒட்டுமொத்தமாக சரிந்து போனது. மேலும் ஜீவாவுக்கும் இதே நிலைமை தான்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது காவியாவை மறக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் இப்பொழுது ப்ரியாவும் ஒதுக்கி விட்டதால் நொந்து போயுள்ளார். இப்படி இருக்க காவியா வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை வந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் காவியாவை அவரது அப்பாவும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு கிடையாது. எனவே தான் யாருக்கும் தெரியாமல் காவியா தனியாக ஹாஸ்டலில் தங்கி வாழ போகிறார். இந்நிலையில் தான் காவியா பற்றிய உண்மை பார்த்திபனுக்கு தெரிய வர போகிறது.
தளபதியின் வாரிசு படத்தின் மரணமாஸ் அப்டேட்.., 2nd சிங்கிள் தேதி வெளியீடு!!
அதாவது காவியா பார்வதியிடம் தாலியை கொடுத்ததை உறவினர் ஒருவர் பார்த்திருப்பாராம். அவர் தான் பார்த்திபனிடம் உண்மையை வந்து சொல்லுவாராம். இதனால் கோவமடையும் பார்த்திபன் அம்மா என்று கூட பார்க்காமல் அடித்து விடுவாராம். இதுதான் இனி வரும் எபிசோடுகளில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.