விஜய் டிவியில் விறுவிறுப்பாக எக்கச்சக்க ட்வீஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 சீரியல். இப்போது இந்த சீரியல் 200 எபிசோடுகளை தாண்டி ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று டெலிகாஸ்ட்டாகி வருகிறது. மேலும் இந்நிலையில் இந்த சீரியல் கூடிய விரைவில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இந்த சீரியல் இரண்டு ஜோடிகளின் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் போய்க் கொண்டுள்ளது. இதில் நடிக்கும் ஹீரோயின்களின் அம்மா கேரக்டரில் பிரபல சீரியல் நடிகை கிருபா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
மக்களே உஷார்.,நாளை மறுநாள் (பிப். 6ல்) இங்கெல்லாம் Power Cut., TNEB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இதைப் பார்த்த இந்த சீரியல் ஹீரோயின் காவியா மற்றும் ஸ்வேதா ரசிகர்கள் இவரின் போஸ்ட் கீழ் வந்து தவறான வார்த்தைகளை பேசியவாறு சண்டை போட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிருபா லைனில் வந்து ரசிகர்களுக்கு தன்னுடைய சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அதாவது நாங்கள் உங்களிடம் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். தேவையில்லாத சர்ச்சை, சண்டைகளை கிளப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.