ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ரம்யா ஒரு வழியாக JK உடன் தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ தொடங்கி விட்டார். ஆனால் பார்த்திபன்-காவியா, ஜீவா-பிரியா இவர்களின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாக உள்ளது. ஜீவா எப்படியாவது பிரியாவை சமாதானப்படுத்த வேண்டும் என போராடுகிறார். இன்னொரு பக்கம் காவியா பார்த்திபன் இருவரும் சந்தோஷமாக வாழ்கின்றன என குடும்பத்தார் அனைவரும் நினைக்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் இவர்களுக்குள் இருக்கும் விரிசல் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் காவியா பார்த்திபன் இருவரும் துரை, மகாலட்சுமி வீட்டுக்கு விருந்துக்கு வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் அடுத்த எபிசோடில் மகாலட்சுமி காவியாவிடம் நீ சந்தோஷமாக தான வாழ்கிற என்று கேட்பாராம். அதற்கு காவியா பார்த்திபன் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.
என்னிடம் விலகி தான் இருக்கிறார். அவரால் நானும் ஜீவாவும் காதலித்த விஷயத்தை மறக்க முடியவில்லை என சொல்லி அலுவராம். மேலும் இனி என்னை பார்த்தி ஏற்றுக் கொள்வார் என்று எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. இதனால் நான் அவரை விவாகரத்து செய்யப் போகிறேன் என சொல்வாராம். இதை கேட்டு மகாலட்சுமி பிள்ளைகளின் வாழ்க்கையை நாமலே கெடுத்துட்டோமே என வருத்தப்படுவாராம்.