4 மாதங்களுக்கு பிறகு.., பார்தி-காவியா என்ன ஆனார்கள்.., ஈரமான ரோஜாவே கதையின் ட்ராக் இதுதான்!!

0
4 மாதங்களுக்கு பிறகு.., பார்தி-காவியா என்ன ஆனார்கள்.., ஈரமான ரோஜாவே கதையின் ட்ராக் இதுதான்!!
4 மாதங்களுக்கு பிறகு.., பார்தி-காவியா என்ன ஆனார்கள்.., ஈரமான ரோஜாவே கதையின் ட்ராக் இதுதான்!!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் அடுத்து எபிசோடுகளில் வரும் சுவாரஸ்யமான திருப்பங்கள் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பார்தி-காவியா

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தேவி பல சூழ்ச்சிகளை செய்து காவியாவிடம் இருந்து பார்த்திபன் கட்டிய தாலியை வாங்குகிறார். விரக்தியில் வீட்டை விட்டு வெளியே செல்லும் காவியா பீச்சில் அமர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது ஜீவா அங்கு வர அவரிடம் காவியா பார்த்திபனை காதலிப்பதாகவும், அவர் கட்டுன தாலி என்னிடம் தான் இருக்கிறது என்று சொல்ல, சந்தோசப்படுகிறார் ஜீவா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின் காவியா ஜீவாவிடம் நான் வெளியூர் செல்கிறேன். எனக்கு எப்போதும் நீ நல்ல நண்பரா இருக்கனும் என்கிறார். ஜீவாவும் நீ பட்ட கஷ்டத்துக்கு இனி உனக்கு எல்லாமே நல்லதா நடக்கும் என ஆறுதல் கூறுகிறார். அடுத்ததாக 4 மாதத்திற்கு பிறகு கதையை நகர்த்தி செல்கின்றனர். அதில் ஜீவா ஹாஸ்பிடலில் ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து நர்ஸிடம் விசாரிக்கிறார் பிரியா. நர்ஸ் பிரியாவிடம் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க போல.

LEO படத்தையே வேண்டாம் என்று மறுத்த பிரபல நடிகை.., என்ன காரணம்னு தெரியுமா?

அந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கா என்று சொல்ல அதிர்ச்சி அடைகிறார். பின் பிரியா ஜீவாவை நம்பாமல் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அப்போது சக்தி பிரியா பேசுவதை கேட்டு நிறுத்து அக்கா என்று கத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வர ரசிகர்கள் அனைவரும் அடுத்த எபிசோடுகாக காத்துக்கொண்டிருக்கிறன. ஏனென்றால் 4 மாதங்களுக்கு பின் ஒளிபரப்பான கதையில் காவியா, பார்த்திபன் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மேலும் ரம்யா-பார்த்திபனுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இப்படி பல கேள்விகளுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அடுத்து வரும் ட்ராக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பார்த்திபன், காவியா யாரை காதலித்தார் என்பதை தெரிந்து கொள்ள துடிப்பாராம். ஒரு கட்டத்தில் காவியா, ஜீவாவை தான் காதலித்தார் என்ற விஷயம் பார்த்திபனுக்கு தெரிந்து விடுமாம். உண்மையை அறிந்த பார்த்தி காவியாவை பத்தி தெரியாம இப்படி கஷ்டப்படுத்திட்டோமே என்று கதறுவாராம். பின் இருவரும் சேர்வது போன்று கதைக்களம் நகருமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here