ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா, பார்த்திபன் ஒன்று சேர முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் இப்பொழுது காவியா காதலித்த விஷயம் அருணாச்சலத்திற்கும் தெரிய வர இதனால் இடிந்து போயுள்ளார். காவியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் பார்வதி இப்பொழுதும் கொஞ்சம் திருந்தாமல் காவியாவை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார். பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.
இப்படி இருக்க இப்பொழுது அருண் ஈரமான ரோஜாவே சீரியல் குழுவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது ஒருவேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்குமோ? அப்படி இல்லையென்றால் பாரதி எதுவும் இந்த சீரியலில் களமிறங்க இருக்கிறாரோ என்று ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.