விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் இப்பொழுது காவியாவை பார்வதி மிகவும் கொடுமைப்படுத்த ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே பார்த்திபன் நொறுங்கிப் போய் இருக்கும் நிலையில் ரூமில் உள்ள அனைத்தையும் போட்டு உடைத்து விட்டார். மேலும் காவியா என்ன செய்வது என்று தெரியாமல் ரூமுக்குள்ளேயே உட்கார்ந்து அழுது கொண்டு உள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தான் எடுத்த முடிவு சரியா?? தவறா?? என்று கூட தெரியாமல் ஒரு ஆதரவும் இல்லாமல் புலம்பி கொண்டிருக்கிறார். இப்படி இருக்க பார்வதி வேகமாக வந்து காவியாவின் துணிமணிகளை அனைத்தையும் பெட்டியில் போட்டு வைத்துக்கொண்டு மேலே உள்ள செட்டில் தூக்கி போடுகிறார். இனிமே ஆறு மாத காலம் நீ இங்க தான் இருக்கனும் என்று கேவலமாக பேசி விடுகிறார்.
சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சூசகமாக சொன்ன S.A.C.., சோசியல் மீடியாவில் ஏற்பட்ட பரபரப்பு!!
காவியாவும் வேறு வழியில்லாமல் வெளியே உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அப்பொழுது வரும் அருணாச்சலம் என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு பார்வதி நான் தான் இவளை இங்கு இருக்க சொன்னேன். இனிமே இந்த நடத்து கெட்டவ இங்கதான் இருக்கணும் என்று சொல்கிறார்.
இதனை கேட்டு அருணாச்சலத்திற்கு கோவம் வர, பார்வதியை கன்னத்தை சேர்த்து அறைந்து விடுகிறார். இந்த பொருளை எங்கே எடுத்தாயோ?? அதே இடத்தில் நீதான் போய் வைக்கணும் என்று சொல்ல கூனி குறுகி போகும் பார்வதி அனைத்தையும் கீழே எடுத்துச் சென்று வைக்கிறார். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.