கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக முதல்வர் – வைரலாகும் புகைப்படம்!!

0

பிரதமர், ஆளுநரை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை போட்டுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா:

தமிழகம் உட்பட இந்திய முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவசரகாலப்பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காந்த 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இதனை பிரதமர், குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் பலரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

தற்போது இதனை தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இவர் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இவர் இதனை சென்னையில் உள்ள ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் வைத்து இதனை செலுத்தியுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்தும் நேரத்தில் அருகில் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். தற்போது அதற்கான புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here