தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி – பதட்டத்தில் மக்கள்!!

0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறுவை சிகிச்சை காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர்:

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாட்டில் தற்போது பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோசனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கொரோன பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை பிறப்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்றும் அறிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரும் இவரே.

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்!!

சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here