குடும்பமே நிதிக்கு ஆசைப்படுறவங்க தான், அதனால தான் அவங்க பேர் ‘நிதி’ல முடியுது’ – ஸ்டாலினை சீண்டும் இபிஎஸ்!!

0

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளை கிழித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக மும்மரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து கட்சிகளும் பிற கட்சிகள் செய்யும் குறைகளை மட்டுமே கூறி வருகின்றனர். இதில் அதிகமாக திமுக மற்றும் அதிமுக கட்சியினர் இருவரும் பிறர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒவ்வொரு தொகுதி பிரச்சாரத்தின் பொழுதும் இரு கட்சி தலைவர்களும் பிறரை பற்றி கடுமையாக பேசி வருகின்றனர். தற்போது அந்த வகையில் தமிழக முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கட்சியை கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதலில் தமிழகத்தில் வாரிசு அரசியல் வருவதை ஒழிப்போம். மேலும் தமிழகத்தில் அதிமுக மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் நிதி என்றே முடியும்.

aiadmk election

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த முக்கிய தகவல் வெளியீடு – தலைமை அதிகாரிகள் அறிவிப்பு!!

கருணாநிதி, உதயநிதி, கலாநிதி இதன்மூலம் என்ன தெரிகிறது, இவர்கள் நிதிக்கு ஆசைப்படும் குடும்பம் என்று கடுமையாக திமுகவை சாடியுள்ளார். மேலும் திமுக கட்சியினர் ஆட்சியில் தங்கள் செய்த காரியத்தை பற்றி பேசமாட்டார்கள். காரணம் அவர்கள் ஆட்சியில் அவர்கள் கூறுவது போல் ஒன்னும் செய்யவில்லை என்று ஸ்டாலினை மிக கடுமையாக சீண்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here