மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் ஒரு மூதாட்டிக்கு மின் கட்டணம் ரூ.2.5 லட்சம் வந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த வீட்டில் ஓரு மின்விசிறியும் ஒரு குண்டு பல்புமே மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இதற்கு 2.5 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் அந்த பாட்டி உட்பட இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் ராம்பாய் பிரஜாபதி என்ற 65 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்தில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து இவர் வாழ்ந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டில் ஒரு மின்விசிறியும் ஒரு குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்தி வருகிறார். ஆனால் இவருக்கு 2.5 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அந்த பாட்டி செய்வதறியாது திகைத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மூதாட்டி கூறியதாவது, “எப்பொழுதும் என் வீட்டுக்கு மின்கட்டணம் 300 லிருந்து 500 ரூபாய்க்குள் தான் வரும். ஆனால் இப்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்தது. இதனால் நான் மின்வாரிய அதிகாரிகளை சந்திக்க முயன்றேன். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை மேலும் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தபோதும் எனக்கு தெளிவாக பதில் கூறவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஒரு மின்விசிறி மற்றும் ஒரு குண்டு பல்பு பயன்படுத்தியதற்கு இரண்டரை லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ள இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் தங்கள் ஆதரவை அந்த மூதாட்டிக்கு தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்