அழகு என்பது நாம் நம்மை வைத்து கொள்வதை பொறுத்ததே. அது இரு பாலாருக்கும் சரி. இன்று நாம் அதிகமாக சந்தித்து வரும் பிரச்னை முகத்தில் கருமை படிவது. இதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1 ஸ்பூன்
- தயிர் – 1 ஸ்பூன்
- ஆரஞ்சு சாறு – சிறிதளவு
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்து வைத்து கொள்ளவும். இந்தனை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தலாம். 5 நிமிடம் நன்றாக தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
பயன்கள்:
இந்த கலவை வீட்டில் செய்யப்படுவதால் ஒரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. எளிமையான முறையில் கிடைப்பதால் நாமும் பயன்படுத்தலாம். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு உங்கள் முகத்தில் உள்ள கருமையை சீக்கிரமாக நீக்கிவிடும். கண்டிப்பாக சரும அழகை மேன்படுத்தும்.