அனைவரும் சண்டே வந்தாலே விரும்புவது அசைவ உணவு தான். எப்பொழுதும் மீன், சிக்கன், மட்டன் என மாறி மாறி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அப்படி உள்ள சூழலில் என்ன செய்வது என்று தெரியவில்லையா? அப்போ உடனே 4 முட்டை மற்றும் தக்காளி எடுங்க இந்த முட்டை தக்காளி தொக்கு செய்து வீட்டில் உள்ளவரை அசந்து போக வைங்க.
தேவையான பொருட்கள்
முட்டை – 4
தக்காளி – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு கலவை – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் 4 முட்டையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் முட்டையின் ஓட்டை உடைத்து, நீள வாக்கில் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து நன்றாக வதங்கி கொள்ளவும்.
வெங்காயம் நன்கு வதங்கி பச்சை வாடை போன பின்னர்,நறுக்கிய தக்காளியை சேர்த்து சுண்ட வதக்கவும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். இதையடுத்து அதில் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொண்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் வெட்டி வைத்த முட்டை துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொண்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் வற்றி தொக்கு பதத்திற்கு வந்ததும் வேண்டுமென்றால் மிளகு தூள் சேர்த்து இறக்கி விடவும். தற்போது மிகவும் சூப்பரான முட்டை தக்காளி தொக்கு ரெடி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்