முகத்தில் இருக்கும் கருமையினை போக்க பெண்கள் பலவாறு முயற்சிகளை எடுத்து வருவர். அவை எதுவுமே தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே முகத்தில் இருக்கும் கருமையினை போக்கி விடலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
முகத்தில் கருமை
முக அழகு ஒருவருக்கு மிகவும் முக்கியம் என்று தான் கூற வேண்டும். சிலருக்கு முகம் அழகாக இருந்தாலும் சில சமயங்களில் கருமை படிந்தது போல மாறி விடும். இதற்கு முறையாக முக அழகினை பராமரிக்காதது, பயன்படுத்தும் ரசாயனம் கலந்த பொருட்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம்.
சிலர் காரணத்தை புரிந்து கொள்ளாமல், அதனை போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருவர். ஆரம்பத்தில் நல்ல பலன்களை இது வழங்கினாலும், கூடிய விரைவிலேயே இது பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம். அதற்கு தேவையானவை அரிசி மாவு 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1 டீஸ்பூன் மற்றும் தக்காளி சாறு 3 டீஸ்பூன். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கிண்ட வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், இதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின், ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தினை கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை கூடிய விரைவில் நீங்கி விடும்.